சென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jan 2022 6:48 PM GMT (Updated: 17 Jan 2022 6:48 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 852 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

ரூ.38 லட்சம் தங்கம்

இதையடுத்து 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரும் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

3 பேரிடம் இருந்தும் ரூ.37 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 852 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story