தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 2:00 PM GMT (Updated: 18 Jan 2022 2:03 PM GMT)

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. 
அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில் மேலும் 23,888- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய  1 லட்சத்து 41 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 29-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,036- ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 8,305- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story