பெரம்பலூர் கலெக்டருக்கு கொரோனா


பெரம்பலூர் கலெக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jan 2022 8:01 PM GMT (Updated: 19 Jan 2022 8:01 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிற்கு கொரோனாவிற்கான லேசான அறிகுறி ஏற்பட்டது. அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது, லேசான பாதிப்பு என்பதால் கலெக்டர் தன்னை முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தி கொண்டார். கலெக்டருடன் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story