கொரோனா தடுப்பூசி செலுத்திய அ.தி.மு.க. பிரமுகர் திடீர் சாவு
கொரோனா தடுப்பூசி செலுத்திய அ.தி.மு.க. பிரமுகர் திடீர் சாவு.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஜகநாதபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 51). அ.தி.மு.க கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம் கழிக்குப்பத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்தநிலையில் அன்று இரவு 7 மணியளவில் வேலாயுதத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை, அவரது குடும்பத்தினர் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே வேலாயுதம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், வேலாயுதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஜகநாதபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 51). அ.தி.மு.க கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம் கழிக்குப்பத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்தநிலையில் அன்று இரவு 7 மணியளவில் வேலாயுதத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை, அவரது குடும்பத்தினர் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே வேலாயுதம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், வேலாயுதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story