ஊரடங்கு விதிமீறல்: சென்னையில் 70 வழக்குகள் பதிவு, 173 வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கு விதிமீறல்: சென்னையில் 70 வழக்குகள் பதிவு, 173 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jan 2022 1:28 PM GMT (Updated: 23 Jan 2022 1:28 PM GMT)

சென்னையில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 173 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.7.87 லட்சம் அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் ரூ. 1.50 லட்சம் அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story