காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்து சிறுமி சாதனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2022 11:22 PM GMT (Updated: 24 Jan 2022 11:22 PM GMT)

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.

மும்பை, 

தானேயை சேர்ந்த சிறுமி சாய் பாட்டீல் (வயது10). இவர் கடந்த மாதம் வாகனப்பெருக்கத்தால் ஏற்படும் காற்று மாசு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். தந்தை துணையுடன் சாகச பயணத்தை மேற்கொண்ட சிறுமி 38 நாட்களில் நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்தார்.

இந்தநிலையில் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சொந்த ஊர் திரும்பிய சிறுமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story