தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் - தமிழக அரசு


தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் - தமிழக அரசு
x
தினத்தந்தி 25 Jan 2022 12:50 PM GMT (Updated: 25 Jan 2022 12:50 PM GMT)

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 146 தெருக்கள் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 70 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Next Story