குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் தமிழக அரசு வேண்டுகோள்


குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் தமிழக அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Jan 2022 11:53 PM GMT (Updated: 25 Jan 2022 11:53 PM GMT)

குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை,

இந்திய குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என். ரவி இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு, பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு உள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயதுமூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

நேரில் வரவேண்டாம்

குடியரசு தின நிகழ்ச்சிகளை டி.வி. மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி மற்றும் ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவை காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை டி.வி., வானொலியில், கண்டு, கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story