தமிழகம் பெருமை கொள்கிறது..! பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து


தமிழகம் பெருமை கொள்கிறது..! பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 26 Jan 2022 11:20 AM GMT (Updated: 26 Jan 2022 11:20 AM GMT)

பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்


2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

அவர் வெளியிட்டுள்ள  டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும்,

பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் தமிழர்களான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஷெனாய் இசைக்கலைஞர் பண்டிட் எஸ். பாலேஷ், சமூக சேவகர் எஸ். தாமோதரன், பழம்பெரும் நடிகை  செளகார் ஜானகி, சதிர் நடனக்கலைஞர் விராலிமலை ரா. முத்துக்கண்ணம்மாள்

கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் ஏ.வி.முருகைய்யன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.


Next Story