தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
நேற்றைய பாதிப்பு 28,515 ஆக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு குறைந்துள்ளது
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
நேற்றைய பாதிப்பு 28,515 ஆக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு குறைந்துள்ளது தமிழ்நாட்டில் இன்று 26,533- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்து 79ஆயிரத்து 284- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 28,156- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 45 ஆயிரத்து 376 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. .
Related Tags :
Next Story