கிடு கிடு உயர்வு; தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா


கிடு கிடு உயர்வு; தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 April 2022 12:04 AM GMT (Updated: 23 April 2022 12:04 AM GMT)

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த 2 நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த 2 நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நேற்று புதிதாக 30 ஆண்கள், 27 பெண்கள் என மொத்தம் 57 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 37 பேர் உள்பட 13 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 25 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 முதியவர்களுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 17 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 36 நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 27 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிகிச்சையில் 286 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story