இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி தொழிலாளி உயிரிழப்பு...!


இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி தொழிலாளி உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 1 May 2022 4:36 AM GMT (Updated: 1 May 2022 4:36 AM GMT)

குமரி அருகே இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி தொழிலாளி உயிரிழந்து உள்ளார்.

அருமனை, 

குமரி மாவட்டம் அருமனை தெற்றி விளை பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜாண் ஜெயக்குமார் (வயது 40). தொழிலாளி. 

இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய்-தந்தை இறந்தபிறகு தனியாக வசித்து வந்தார்.

ஜெயக்குமார் நேற்று இரவு மது குடித்துவிட்டு மீதி இருந்த மதுவை தனது இடுப்பில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்ற போது வீட்டின் அருகில் கீழே விழுந்துள்ளார். 

அப்போது  தனது அண்ணன் ஆட்டிற்கு தீனி வைக்க சென்றபோது தனது தம்பி கீழே படுத்திருப்பதை பார்த்ததும் பெயர் சொல்லி அழைத்துள்ளார். அழைப்பை ஏற்காமல் படுத்திருந்ததால் அருகில் சென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் கிடந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தம்பி ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை அறிந்த அருமனை போலீசார் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story