பாதிப்பு வெகுவாக குறைந்தது தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா


பாதிப்பு வெகுவாக குறைந்தது தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 May 2022 11:08 PM GMT (Updated: 8 May 2022 11:08 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 26 ஆண்கள், 21 பெண்கள் என மொத்தம் 47 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 23 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 7 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூர், தர்மபுரி உள்பட 19 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளன. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பும் இல்லை, சி கிச்சையிலும் ஒருவர்கூட இல்லை.

தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 24 பேர் மட்டும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 52-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 265 பேர், செங்கல்பட்டில் 127 பேர் உள்பட 478 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story