பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு


பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2022 7:15 PM GMT (Updated: 11 May 2022 7:15 PM GMT)

பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் ஆபாசமாக பேசி விளையாடி, சிறுவர்களை தவறான பாதைக்கு இழுத்து செல்வதாக பப்ஜி மதன் என்பவர் மீது போலீசில் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன. இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஆண்டு அவரை கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து பப்ஜி மதன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த மாதம் போலீஸ் கமிஷனரின் உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Next Story