"அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு


அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
x
தினத்தந்தி 12 May 2022 11:41 AM GMT (Updated: 12 May 2022 11:41 AM GMT)

நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே ஆசை படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பாடியில் நடைபெற்ற திமுகவின் ஒராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் சேகர்பாபு, எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ், கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்க, இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டதாக தெரிவித்தார். 

அமைச்சர் பதவிக்காக ஆசைப்படவில்லை என்ற அவர், வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே ஆசைப்படுவதாக கூறினார்


Next Story