தினசரி ரூ.2 ஆயிரம் சம்பளம் - பிச்சையெடுக்க அழைக்கும் வாலிபர்...!
வெள்ளகோவில் அருகே தினசரி ரூ.2 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்று கடைக்காரரை வாலிபர் பிச்சையெடுக்க அழைத்து உள்ளார்.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் ஒரு வாலிபர் பிச்சை கேட்கின்றான்.
அப்போது அந்த கடைக்காரர் நீ நல்லா தானே இருக்க வேலைக்கு வா சம்பளம் தருகின்றேன் என்று அழைக்கின்றார். அதற்கு அந்த வாலிபர் எவ்வளவு கொடுப்பீங்க என்று கேட்கின்றான். கடைக்காரர் ரூ. 400 தருகின்றேன் என்று கூறுகின்றார்.
இதைக்கேட்ட அவர் நான் தினசரி ரூ.2 ஆயிரம் சம்பாதிக்கிறேன் நீங்க வேணும்னா என்னுடன் வாருங்கள் என்று கூறி செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றனது.
Related Tags :
Next Story