இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை - 2 போலீசார் கைது...!
சூளகிரி அருகே இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 2 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி- உத்தனபள்ளி சாலையில் உள்ள பெல்லட்டி கிராமத்தில் திருமணமான 25 வயது பெண் ஒருவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலுக்கு சூளகிரி போலீஸ் நிலையத்தில் பணி புரியும் முருகானந்தம், மாரியப்பா என்ற 2 போலீசார், உணவு வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஓட்டல் நடத்தும் பெண்ணிடம் பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும், பணம் தர மறுத்தால் கர்நாடக மதுபானங்கள் மற்றும் கஞ்சா பொட்டலத்தை ஓட்டலுக்குள் வைத்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் ஓசூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், முருகனந்தம், மாரியப்பா ஆகிய 2 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story