மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என்று கோவை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா பல்கலையின் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் இன்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, பாரதியார் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. புதிய கல்விக்கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்கிறோம்.
தமிழ் மிகவும் பழமையான மொழி, இலக்கியச் செழுமை மிக்க மொழி. நாட்டின் மிகவும் முக்கியமான மொழி தமிழ் மொழி. மாநில மொழிகள் வளர வேண்டும்.
கடந்த 7 வருடங்களில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரட்டிபாக்கபட்டுள்ளது. நமது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும். இந்த பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story