நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் விபத்து - இடிபாடுகளில் 6 பேர் சிக்கியிருப்பதாக தகவல்


நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் விபத்து - இடிபாடுகளில் 6 பேர் சிக்கியிருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 14 May 2022 9:14 PM GMT (Updated: 14 May 2022 9:14 PM GMT)

பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ராட்சத கல் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் முயற்சியில் மற்ற தொழிலார்கள் ஈடுபட்ட நிலையில், இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் நிலை குறித்த தகவல்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்த தகவலறிந்து, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார். 

Next Story