தூத்துக்குடி: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - போலீசார் விசாரணை...!


தூத்துக்குடி: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - போலீசார் விசாரணை...!
x
தினத்தந்தி 15 May 2022 3:17 AM GMT (Updated: 15 May 2022 3:17 AM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய பெண்னை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தை அடுத்த கீழ நட்டார்குளம் சூசையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் திருப்பதி ராஜா (வயது 28). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தி (வயது 24). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் சமையல் செய்தபோது, கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த வசந்தி, சமையலறையில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை கணவர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

சிகிச்சை

இதில் படுகாயமடைந்த திருப்பதி ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வசந்தியை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story