காட்பாடி சுந்தரி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு


காட்பாடி சுந்தரி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2022 8:26 AM GMT (Updated: 15 May 2022 8:26 AM GMT)

காட்பாடி சுந்தரி அம்மன் கோவிலில் நடைபெறும் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி குமரப்ப நகரில் உள்ள கிராம தேவதை சுந்தரி அம்மன் கோவில் ரூ. 72 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தூண்களை தரமாக அமைக்க வேண்டும் எனவும்  பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். 

இதையடுத்து தாராபடவேட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலும் ஆய்வு செய்தார். அப்போது கோவில் நிர்வாகிகள் பழமை வாய்ந்த இந்த கோயிலை திருப்பணி நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்  சேகர் பாபு தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது எம்.பி.க்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன், அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார்,
1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story