உடுமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்...!


உடுமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 16 May 2022 5:14 AM GMT (Updated: 16 May 2022 5:25 AM GMT)

உடுமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மாபட்டியைச்  சேர்ந்தவர் மதனகோபால்(வயது 28).இவர் தனது மனைவி சஹானா (22), தந்தை முருகன்(53), தாயார் முருகேஸ்வரி(40) மற்றும் உறவினர் மாரியம்மாள்(60) ஆகியோருடன் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கு காரில் சென்றனர். காரை ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலாபுரத்தைச் சேர்ந்த அசோக்(22) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

அவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை உடுமலையை அடுத்த முக்கோணம் பகுதியில் கார் வந்த போது டிரைவரின் கட்டுப்பாடை  இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் சம்பவம இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் அவர்களை மீட்டு உடுமலை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மதனகோபாலின் தந்தை முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த மற்ற 5 பேரும் மேல் சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story