சிவகிரி அருகே கார்-மினி டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு


சிவகிரி அருகே கார்-மினி டெம்போ நேருக்கு நேர்  மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 May 2022 10:45 AM GMT (Updated: 16 May 2022 10:45 AM GMT)

சிவகிரி அருகே கார்-மினி டெம்போ மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.

சிவகிரி, 

 ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 68), விவசாயி, இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இவர் காரில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு  திரும்பி வந்து கொண்டிருந்த போது பேயாங்காட்டு வலசு அண்ணமார் கோயில் அருகே எதிரே வந்த  மினி டெம்போ நேருக்கு நேர் மோதியதில் காருக்குள் இருந்த பழனிச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தவல் அறிந்து வந்த போலீசார்  அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக கூறினார்கள்.  

பின்னர் அவரது உடல் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story