446 குவார்ட்டர் பாட்டில்களுடன் 4 பெண்கள் கைது


446 குவார்ட்டர் பாட்டில்களுடன் 4 பெண்கள் கைது
x
தினத்தந்தி 18 May 2022 4:54 PM GMT (Updated: 18 May 2022 4:54 PM GMT)

புதிய பஸ் நிலையத்தில் தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 4 பெண்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 446 குவார்ட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி
புதுவை புதிய பஸ்நிலையத்தில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். 
அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்து இருந்த பைகளை சோதனையிட்டதில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் திண்டிவனம் கிடங்கல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வள்ளி (வயது 40), விஜயா (50), செல்வி (50), கல்பனா (34) என்பதும், புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, கடத்திச் சென்று தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 446 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 


Next Story