ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா
x

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 274 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 819 ஆக உயர்ந்தது.

நேற்று 8 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 1 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 84 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story