கார், மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது


கார், மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் கார், மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கார், மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேசுவரன், சோமசுந்தரம் மற்றும் போலீசார் மேலப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மாட்டுச்சந்தை நுழைவு வாசல் பகுதியில் வந்த போது ஒருவர் மொபட்டில் 2 மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அவரைபிடித்து விசாரணை நடத்திய போது அவர், மேலப்பாளையம் ராஜா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த பழனிகுமார் (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி, மொபட்டை பறிமுதல் செய்தனர்.

காரில் கடத்தல்

இதேபோல் ஏர்வாடி பகுதியில் அணைக்கரை ரோட்டில் ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது, அதில் 16 மூட்டைகளில் 720 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு. இதுதொடர்பாக நாங்குநேரி மஞ்சங்குளத்தை சேர்ந்த கந்தையா (27), சுடலைகண்ணு ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story