3 மாணவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

கடலில் மூழ்கி பலியான 3 மாணவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
திசையன்விளை:
உவரி அருகே உள்ள நவ்வலடி கடலில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள். இதனை அறிந்ததும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிர் இழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று மாலை சபாநாயகர் அப்பாவு உயிர் இழந்த மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகையை வழங்கினார். நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





