கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற 3 பேர் கைது

நீலகிரி

கூடலூர்

கூடலூர் நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு ஆசாமியை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர், தேவர்சோலையை சேர்ந்த நவுசாத்(வயது 33) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று நீலகிரி- கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு வந்து கொண்டிருந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த சதீஷ் (20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி லவ்டேல் பகுதியில் கஞ்சா விற்ற அமுல்ராஜ்(51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story