திருப்பரங்குன்றம் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 3 பேர் கைது


திருப்பரங்குன்றம் அருகே  பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  காதலன் உள்பட 3 பேர் கைது
x

திருப்பரங்குன்றம் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் பலாத்காரம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 21). இவரும், பிளஸ்-1 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி கார்த்திகேயன் கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்தி கேயன் தனது நண்பர்களான ஆதித்யா (21), ஹரிதாஸ் (21) ஆகிய 2 பேருடன் சேர்ந்து அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

போக்சோவில் கைது

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ஆதித்யா, ஹரிதாஸ் ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story