திருத்தணி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது


திருத்தணி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
x

திருத்தணி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரணிவராகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக திருத்தணியில் இருந்து ஆந்திராவை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திராவில் அதிக விலைக்கு விற்க கடத்தி சென்றது தெரிந்தது. இது தொடர்பாக ரஞ்சித் (வயது 25), டிரைவர் முபராக் (33) ஆகிய இருவரை கைது செய்த போலீசார், சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story