சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மின்சார ரெயிலில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மின்சார ரெயிலில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மின்சார ரெயிலில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசியை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ெரயிலில் சென்டிரல் ெரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முத்துக்குமார், கொருக்குப்பேட்டை ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்து இருந்த ரேஷன் அரிசி மூட்டையை பறிமுதல் செய்தனர். விசாரணையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி மூட்டை மூட்டையாக கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு மின்சார ரெயிலில் கடத்திச்செல்ல முயன்றது தெரிந்தது. கடந்த 2 நாட்கள் இதுபோல் நடத்தப்பட்ட சோதனையில் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், அவற்றை குடிமைப்பொருள் உணவு பாதுகாப்பு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story