மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது
x

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணியை அடுத்த செருதூரை சேர்ந்தவர் சத்தியசீலன். ஆட்டோ டிரைவர். இவர் தனது மோட்டார்சைக்கிளை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றார். அப்போது 3 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளின் சைடு லாக்கை உடைத்து திருட முயன்றனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் 3 வாலிபர்கள் சத்தியசீலன் மோட்டார்சைக்கிள் சைடு லாக்கை உடைத்து திருட முயன்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் சத்தியசீலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிராம்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சத்தியேந்திரன் மகன் ஹரிஹரன் (வயது22), பட்டுக்கோட்டை பாய்கொள்ளை ஆளவந்தான்குளம் பகுதியை சேர்ந்த முகமதுஷேக் மகன் முகமது ரபீக் (21), முத்துப்பேட்டை தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த காதர் உசைன் மகன் பர்வீஸ்அகமது (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story