கஞ்சா, சாராயம் விற்ற 4 பேர் கைது


கஞ்சா, சாராயம் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:47 PM GMT)

கஞ்சா, சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

மங்கலம்பேட்டை,

மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் நேற்று கர்ணத்தத்தில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த குபேந்திரன்(வயது 19), கர்ணத்தம் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் வினோத்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்றதாக புதுப்பேட்டையை சேர்ந்த ராமசாமி மனைவி பாக்கியலட்சுமி (52), கோமங்கலம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி மகன் பிரபாகரன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 15 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story