கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது


கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது
x

கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிங்கராஜபுரம் சுடுகாடு அருகே கஞ்சா விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சந்திரன் (வயது 45), அவருடைய மனைவி ஈஸ்வரி (40), சுரேஷ் (37), பண்டாரவூத்து கிராமத்தை சேர்ந்த பொன்னாங்கன் (41) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போடி தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த லிங்கேஷ் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story