6 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை


6 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை
x

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

பெரம்பலூர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம் அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். இதனை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. இதேபோல் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் பள்ளிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 31 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 27 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் செயல்பட்டது. ஆனால் பாடாலூர், கீழப்புலியூர், லெப்பைக்குடிகாடு, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 தனியார் பள்ளிகள் மட்டும் நேற்று திறக்கப்படாமல், விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 44 தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 42 பள்ளிகள் செயல்பட்டன. 2 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


Next Story