சேலம் வழியாக ரெயிலில் கடத்த முயன்ற 9 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது


சேலம் வழியாக ரெயிலில் கடத்த முயன்ற 9 கிலோ கஞ்சா பறிமுதல்  வாலிபர் கைது
x

சேலம் வழியாக ரெயிலில் கடத்த முயன்ற 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சூரமங்கலம்,

ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சேலம் ரெயில்வே போலீசார் பாலமுருகன், முத்துவேல், சக்திவேல், அசோக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் (13351) நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் கடந்து ரெயில் வந்த போது முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒரு பையில் சுமார் 9 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தி வந்தது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் தாகூர் (வயது33) என்பது தெரியவந்தது, இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர் தாகூரை கைது செய்து அவரிடம் இருந்து 9 கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story