பெரம்பலூரில் நடந்த வேட்டையில் 9 ரவுடிகள் கைது


பெரம்பலூரில்  நடந்த வேட்டையில் 9 ரவுடிகள் கைது
x

பெரம்பலூரில் நடந்த வேட்டையில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற ரவுடி வேட்டையில் மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் அடங்குவர். அவர்கள் வீடுகளிலும், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு கொடூர ஆயுதங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ரவுடிகள் மீதும், அரியலூர் மாவட்டத்தில் 33 ரவுடிகள் மீதும் நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு, அரியலூரில் 8 ரவுடிகளுக்கு கடந்த 5 நாட்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் கீழ் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நடமாட்டங்கள் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் மற்றும் அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் பொதுமக்களும் பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்ற செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story