புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக்கடைக்காரர் கைது
புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் நேற்று எசனை கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது எசனை கடைவீதி தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 60) என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.ஆயிரத்து 160 மதிப்பிலான ஆயிரத்து 350 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புகையிலை பொருட்களை கைபற்றிய போலீசார் வெங்கட்ராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story