சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்; காண்டிராக்டர் மனைவி உள்பட 2 பேர் பலி


சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்; காண்டிராக்டர் மனைவி உள்பட 2 பேர் பலி
x

வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் கட்டிட காண்டிராக்டர் மனைவி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் கட்டிட காண்டிராக்டர் மனைவி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

காரில் சென்றனர்

நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 80). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி செல்லம்மாள்(வயது 74). இவர்களது மகள் பொன்மலர்(40). இவரது கணவர் சண்முகநாதன். இந்நிலையில் பொன்மலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கோவைக்கு அவரை குடும்பத்தினர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.

அந்த வேனின் பின்னால் செல்லம்மாள் காரில் சென்றார். காரை, நெல்லையை சேர்ந்த டிரைவர் ராஜா (38) ஓட்டினார். இந்த கார் நேற்று மாலை 5.45 மணிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பிரிவு என்ற இடத்தில் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தது.

2 பேர் பலி

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் கார் சேதமடைந்து இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே செல்லம்மாள், டிரைவர் ராஜா இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய காரில் இருந்து செல்லம்மாள், ராஜா ஆகிய இருவரின் உடல்களை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story