முதியவரை தாக்கியவர் மீது வழக்கு


முதியவரை தாக்கியவர் மீது வழக்கு
x

முதியவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவில் வசித்து வருபவர் வைத்திலிங்கம்(வயது 75). இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணனின் மகன் சுதாகர்(36) குடிபோதையில், வைத்திலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டில் வாங்கி வரக்கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளார். மது வாங்கி வர மறுத்ததால், ஆத்திரமடைந்த சுதாகர் வைத்திலிங்கத்தை பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வைத்திலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தா.பழூர் போலீசில் வைத்திலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story