கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற நண்பர் கைது


கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற நண்பர் கைது
x

திருச்சி மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

கே.கே.நகர், ஆக.7-

திருச்சி மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.

கஞ்கா கொடுக்க முயற்சி

திருச்சி-சேலம் மெயின் ரோடு நொச்சியம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 21). இவருடைய நண்பர் ரோகித் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை பார்க்க நேற்று முன்தினம் மாலை திருச்சி மத்திய சிறைக்கு விக்னேஷ்வரன் வந்தார். அவரை பார்வையாளர்கள் இடத்துக்கு அனுமதிக்கும் முன்பு மத்திய சிறை அதிகாரி கண்ணன் (56), சோதனை செய்தார்.

அப்போது விக்னேஸ்வரனிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், அதை கைதி ரோகித்துக்கு கொடுக்க கொண்டு வந்தது தெரியவந்தது. உடனே இதுபற்றி சிறை அதிகாரி கண்ணன் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story