காரில் 260 கிலோ குட்கா கடத்தியவர் கைது


காரில் 260 கிலோ குட்கா கடத்தியவர் கைது
x

காரில் 260 கிலோ குட்கா கடத்தியவர் கைது

திருவாரூர்

நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு காரில் 260 கிலோ குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா

நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு காரில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக திருவாரூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருவாரூர் நாகை பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மூட்டையுடன் வந்த ஒரு காரை மறித்து, அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 260 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

காரில் கடத்தல்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நீடாமங்கலம் சித்தமல்லி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் முனியப்பன் (வயது 37) என்பதும், அவர் நீடாமங்கலத்தில் இருந்து நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக காரில் குட்கா பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காருடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் முனியப்பனை கைது செய்தனர். மேலும் இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது. எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story