ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கே.வி.குப்பம் அருகே ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த சென்றாம்பள்ளியில் தனியார் ஷூ கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இதில் சுமார் 100 பெண்கள் பகல்நேரப் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு பொங்கலை முன்னிட்டு இந்த மாத சம்பளத்துடன் போனஸ் வழங்குவதாகக் கூறி இருந்தனர். மாதாந்திர சம்பளம் 7-ந் தேதி வழங்குவது வழக்கம். ஆனால் இதுவரை வழக்கமான சம்பளமும் தரவில்லை, போனசும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்கு நேற்று மதியம் 1 மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று மாலை சம்பளம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர். மாலை 5 மணிக்கே வீட்டுக்கு வரும் பெண்கள் இரவுவரை வீட்டிற்கு வராததால் அவர்களைத் தேடி உறவினர்கள் வந்தனர். அவர்கள் வெளியே பலமணிநேரம் காத்திருந்தனர்.


Next Story