அரசு பள்ளிக்குள் புகுந்த பாம்பு; மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்


அரசு பள்ளிக்குள் புகுந்த பாம்பு; மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 8:30 PM GMT (Updated: 13 Jan 2023 8:30 PM GMT)

போடியில் அரசு பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தேனி

போடி சுப்புராஜ்நகரில், பழைய கோர்ட்டு அருகில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்தனர். அப்போது வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது. இதனை பார்த்த மாணவர்கள் அலறியடித்தபடி பள்ளியை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், பள்ளிக்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது. பள்ளிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story