திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் நவீன ஆலைகளில் திடீர் ஆய்வு


திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் நவீன ஆலைகளில் திடீர் ஆய்வு
x

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் நவீன ஆலைகளில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு செய்தனர்

திருச்சி

திருச்சி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது. பின்னர், நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது வழக்கம். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் அரிசி ஆலைகளில் முறைகேடு ஏதும் நடக்கிறதா? என்று குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மண்டல குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் மணப்பாறை, மணிகண்டம் பகுதிகளில் உள்ள ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து வரும் நெல் தரமாக வருகிறதா? அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசி தரமாக இருக்கிறதா? ஆலையில் இருந்து ரேஷன் அரிசி வேறு எங்கும் அனுப்பப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்வில் எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை.


Next Story