தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது


தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

நெல்லை அருகே தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் மோகன் (வயது 30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தாழையூத்து போலீசார் மோகனை ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாழையூத்து சந்திப்பு பகுதியில் மோகன் பொதுமக்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

1 More update

Next Story