பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
x

உளுந்தூர்பேட்டை அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சோமாசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி(வயது 27). இவர் சம்பவத்தன்று திருநாவலூரை அடுத்த தேவியானந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் கட்டை மேல் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது புகழேந்தி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகழேந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி வாணிஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story