செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது


செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

திண்டிவனத்தில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது 10 செல்போன்கள் பறிமுதல்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் அய்யனார்(வயது 38). இவர் திண்டிவனம்-செஞ்சி பஸ் நிறுத்தத்தில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் அய்யனார் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர் கடையின் மேற்கூரை வழியாக உள்ளே புகுந்து 10 செல்போன்களை திருடி சென்று விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அய்யனாரின் செல்போன் கடையில் புகுந்து திருடியவர் திண்டிவனம் ரோஷனை பகுதி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் வினோத்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story