கடையில் பணம் திருடிய வாலிபர் கைது


கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
x

நெல்லை டவுனில் கடையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் ஏ.பி. மாடத்தெருவில் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 42) என்பவர் பிளாஸ்டிக் கடை வைத்து உள்ளார்.

சம்பவத்தன்று இவர் கடையில் ரூ.82 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றதாக நெல்லை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடையில் பணியாற்றி வரும் பேட்டை ரகுமான்பேட்டையை சேர்ந்த முகமது அப்துல் ரகுமான் (24) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story