கால்வாய் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர்


கால்வாய் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர்
x

மூங்கில்துறைப்பட்டில் கால்வாய் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் 25 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைபாட்டு,

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் உள்ள வலதுபுற கால்வாய் வழியாக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகன் சின்னப்பராஜ் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் உள்ள வாய்க்காலில் கை, கால்களை கழுவுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசாருக்கு சம்பவ இடத்துக்கு சென்று சின்னப்பராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சாத்தனூர் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனிடையே இரவு வெகு நேரம் ஆனதால் சின்னப்பராஜை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று மீண்டும் தேடும் பணியில் போலீசார் மீட்டனர்.

மீட்பு

இந்த நிலையில் வடசிறுவள்ளூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டாரணை பகுதியில் மாலை 5 மணி அளவில் சின்னப்பராஜ் ஒரு மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கால்வாய் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் 25 மணி நேரத்துக்கு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story